தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு கடிதம்
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு கடிதம்

Share

தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு கடிதம்

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை மற்றும் பதிமூன்றாம் திருத்தச்சட்டம் தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் 07.07.2023 இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்லவுள்ளார்.

இந்நிலையில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை, இன விடுதலைக்கான தீர்வுகள் மற்றும் பதின்மூன்றின் நிலைமைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கும் வகையில் இந்திய பிரதமருக்கு சக தமிழ் கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை தயார் செய்துள்ளோம்.

குறித்த கடிதம் தொடர்பில் எமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

மேலும், இந்த கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் கடிதம் கிடைத்ததும் கட்டாயம் மோடிக்கு அனுப்பப்படும்.”என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதன்கிழமை விடுமுறை ஏன்? – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், நாளை...

11 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரு அடையாள அட்டைக்கு ஒரு QR மாத்திரமே: டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய கட்டுப்பாடு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள எரிபொருள் QR முறைமையின் கீழ், ஒரு தேசிய அடையாள...

10 16
செய்திகள்அரசியல்இலங்கை

அரச அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்துப் புதிய சுற்றுநிருபம்: புதன்கிழமை விடுமுறை நடைமுறைகள் அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில் அரச அலுவலகங்களை முன்னெடுத்துச்...

09 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எதிர்காலத்தில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி எச்சரிக்கை

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், தற்போது மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், வரும் காலங்களில்...