sampanthan
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் கட்சிகள் சந்திப்பு! 

Share

புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கில் அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் உள்ளிட்ட 03 யோசனைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (25) பிற்பகல் கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ். ஸ்ரீதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

அந்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கில் காணி கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, சுவீகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக தமிழ் மக்களுக்கு வழங்குதல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது உள்ளிட்ட 3 யோசனைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...