sampanthan
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் கட்சிகள் சந்திப்பு! 

Share

புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கில் அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் உள்ளிட்ட 03 யோசனைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (25) பிற்பகல் கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ். ஸ்ரீதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

அந்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கில் காணி கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, சுவீகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக தமிழ் மக்களுக்கு வழங்குதல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது உள்ளிட்ட 3 யோசனைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...