8 22
இலங்கைசெய்திகள்

சுமந்திரனின் இல்லத்தில் ஒன்றுகூடிய தமிழ் தேசிய கட்சிகள்

Share

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டணி இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இல்லத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதி நல்லூரில் அமைந்துள்ள எம். ஏ சுமந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.

சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் சுரேஷ் பிரேம சந்திரன் சிவநாதன் வேந்தன் சிவநாதன் வேந்தன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபையின் மேயர் வேட்பாளர் தீபன் திலீசின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழரசு கட்சி சார்பில் பதில் தலைவர் சி.வி. கே சிவஞானம், எம் ஏ சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருந்தனர்.

இச்சந்திப்பில் உள்ளூராட்சி அதிகார சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

Share
தொடர்புடையது
விக்ரம் மிஸ்ரி
இலங்கை

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர்!

இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...

exam hall
இலங்கை

தொடரும் காலநிலை சீர்கேடுகள் – திட்டமிடப்பட்ட பரீட்சைகள் தொடர்பில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல்.

தொடரும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை...

அகில விராஜ் காரியவசம் 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்றைய...

சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...