1 10
இலங்கைசெய்திகள்

கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தமிழக கட்சியொன்று கோரிக்கை

Share

கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தமிழக கட்சியொன்று கோரிக்கை

இலங்கையின் நெடுந்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி தமிழக கடற்றொழிலாளர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, இரண்டு நாட்டு கடற்றொழிளாளர்களும், குறித்த கடற் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி நேற்று (11) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள்ளார்.

அந்த அறிக்கையில், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக. ஜூலை 1ம் திகதியும் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

இதனை எதிர்த்து இராமேஸ்வரத்தில் கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் மற்றுமொரு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...