13 16
இலங்கைசெய்திகள்

அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : தொடரும் சர்ச்சை

Share

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட மாணவி விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) அளித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23 ஆம் திகதியன்று மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்தநிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பவம் தொடர்பிலான எஃப்ஐஆர் சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தின.

இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் எஃப்ஐஆர் வெளியானது குறித்து மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமனம் செய்த உத்தரவிட்டனர்.

அத்தோடு, அரசு அனுமதியின்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை காவல்துறை ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், காவல்துறை ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைகள் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...