kajen
இலங்கைசெய்திகள்

கைதிகளை பார்வையிட தமிழ் எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு!

Share

கைதிகளை பார்வையிட தமிழ் எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட நேற்று சென்ற காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகளுக்கு இராஜாங்க அமைச்சரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் பல கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிட சென்ற தமிழ் எம்.பிக்களுக்கு சிறை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிறைக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சிடம் அனுமதி பெற்று அறிவித்தல் கிடைத்தால் மாத்திரமே அனுமதிப்போம் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் சிறையில் உள்ளவர்களின் நலன்களை பார்வையிட சட்டத்தரணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எங்களை அனுமதிக்கச் சொல்லி வேண்டினோம்.

ஆனால் அவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை எடுப்போம் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...