செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ்க்கட்சிகளின் வரைபில் தமிழீழம் – கண்டுபிடித்தார் குணவர்த்தன!!

Dinesh Gunawardena
Share

இந்திய பிரதமருக்கான ஆவணத்தை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மட்டும் கையொப்பமிட்டு அனுப்புமாக இருந்தால் அது விடுதலை புலிகளின் கனவான தமிழீழத்திற்கான வரைபாகவே இருக்குமென கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் பேசுகின்ற கட்சிகளுக்கு இடையில் – பொதுவான இணக்கப்பாடு , ஒற்றுமை இல்லை. இந்திய பிரதமருக்கு என தயார் செய்யப்பட்ட பொது ஆவண விடயம் இதனை வெளிக்காட்டுகின்றது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் இங்குள்ளவர்களுக்கு ஒருபோதும் அரசியல் தீர்வினை வழங்க முன்வராது.

எமது நாட்டின் உள் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு எந்தவொரு வெளிநாடுகளுக்கும் அனுமதி இல்லை. நாட்டின் அரசுதான் இங்குள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் என்பதை தமிழ்த்தலைமைகள் விளங்க வேண்டும்.

தமிழ், முஸ்லிம், மலையக மக்களது அனைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நடவடிக்கையில் எமது அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழ்பேசும் கட்சி தலைவர்கள் எம்மை நாடாமல் சர்வதேசத்தினை நாடுவதுதான் விசித்திரமாக உள்ளது.என்றார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு அனுப்புவதெற்கென தயார் செய்யப்பட்ட வரைபில் வடக்கு கிழக்கு தமிழ்க்கட்சிகளின் தலைமைகளே கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....