சுசில் பிரேமஜயந்த
அரசியல்இலங்கைசெய்திகள்

சுசிலுக்கும் வலை விரிக்கின்றது கோட்டா அரசு!

Share

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் ஆளுங்கட்சி வலை விரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்த அணி அண்மையில் நடத்திய பேச்சில் சுசில் பிரேமஜயந்த பங்கேற்ற போதிலும் அதன் பின்னர் நடைபெற்ற சந்திப்புகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையிலேயே அவரை வளைத்துப்போடும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

சுசில் பிரேமஜயந்த பச்சைக்கொடி காட்டினால், எதிர்வரும் 18ஆம் திகதி பதவியேற்கவுள்ள அமைச்சரவையில் அவர் இடம்பெறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் செயற்பாடுகளை விமர்சித்ததால், இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...