15 5
இலங்கைசெய்திகள்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம்

Share

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றதை தொடர்ந்து 2வது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை (Susie Wiles ) ட்ரம்ப் நியமித்துள்ளமை உலக அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

சூசி, நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை நிர்வகித்துள்ளார்.

சூசி வைல்ஸை பற்றி ட்ரம்ப் கூறுகையில், ”அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றியை நான் பெறுவதற்கு சூசி வைல்ஸ் மிகவும் உதவியாக இருந்தார்.

என்னுடைய 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரசாரத்தின் ஒரு பகுதியாகவும் அவர் இருந்தார். அத்துடன் உலகளவில் போற்றப்படுகிறவர்.

மேலும், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற சூசி தொடர்ந்து அயராது உழைப்பார் என நம்புகிறேன்.

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட சூசி தகுதியானவர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் 32வது தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...