இலங்கைசெய்திகள்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம்

Share
15 5
Share

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றதை தொடர்ந்து 2வது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை (Susie Wiles ) ட்ரம்ப் நியமித்துள்ளமை உலக அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

சூசி, நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை நிர்வகித்துள்ளார்.

சூசி வைல்ஸை பற்றி ட்ரம்ப் கூறுகையில், ”அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றியை நான் பெறுவதற்கு சூசி வைல்ஸ் மிகவும் உதவியாக இருந்தார்.

என்னுடைய 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரசாரத்தின் ஒரு பகுதியாகவும் அவர் இருந்தார். அத்துடன் உலகளவில் போற்றப்படுகிறவர்.

மேலும், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற சூசி தொடர்ந்து அயராது உழைப்பார் என நம்புகிறேன்.

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட சூசி தகுதியானவர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் 32வது தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...