IMG 8708
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விவாதம் வேண்டும் என்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்தார்.

இதற்காக இரு நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.

” நான் சட்டம், ஒழுங்கு அமைச்சராக இருந்தபோது அரச உளவுப்பிரிவின் அறிக்கையொன்று கிடைத்தது. இது தொடர்பில் சிஐடி மற்றும் ரிஐடி பணிப்பாளர்களுடன் நான் கலந்துரையாடினேன்.

இதன்பிரகாரம் சஹ்ரானை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. நீதிமன்றத்தில் நீல பிடியாணை பெறப்பட்டிருந்தது.

ஆனால் 52 நாட்கள் அரசியல் சூழ்ச்சியின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியில் இருந்து நான் மாற்றப்பட்டேன். திடீரென நாமல் குமார என ஒருவர் வந்தார்.கொலை சூழ்ச்சி பற்றி கருத்து வெளியிட்டார். ரிஐடி பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாமல் குமார விவகாரத்துக்கு என்ன நடந்தது? சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டது ஏன்?

எனவே, இந்த சம்பவத்தின் பின்னணி என்னவென்பது மக்களுக்கு தெரியும். அவர்கள்தான் இன்று எம்மீது கைநீட்டுகின்றனர்.” – ரஞ்சித் மத்தும பண்டார் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...