8 9
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியவர் தொடர்பில் பிரதியமைச்சர் தகவல்

Share

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை தங்கால்லை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட நிலையில், அவர் செல்லாமல் ஒளிந்துதிரிவதாக பிரதியமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,

புவக்தண்டாவே சனாவின் வீட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உணவு உட்கொண்டார் என்று ஊடக மாநாட்டில் தெரிவித்தவர் அது தொடர்பான விபரங்களை பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்காமல் ஒளிந்துள்ளார்.

எல்லாம் அப்பட்டமான பொய்கள். சிலர் தான் ஜே.வி.பியில் இருந்ததாக பழைய கதைகளை சொல்லி திரிகின்றனர். அவர்களே ஜே.வி.பியை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியவர்கள்.

இன்னொருவர் தனது ஓய்வூதியம் இல்லாமல் போகும் என்று இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஜே.வி.பியின் சட்டக்குழுவில் பதவி வகித்ததாக சொல்கின்றார். ஆனால் அது தொடர்பான ஆவணங்களை காண்பிக்குமாறு கோரியதும் வாயடைத்து போயுள்ளார். இவ்வாறானவர்கள் வானம் பிளக்கும் பொய்களையே கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...