நாட்டில் சீனியின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் சீனி விலை 160 ரூபாவாக காணப்பட்டது. எனினும் திடீரென 50 ரூபாவால் விலை உயர்ந்துள்ளது. இதன்படி தற்போது சீனியின் விலை 210 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சீனி விலையின் திடீர் உயர்வுக்கு தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று பாவனையாளர் அலுவல்கள் பற்றிய இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
Leave a comment