tamilni 385 scaled
இலங்கைசெய்திகள்

நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

Share

நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன் சந்தையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் விலை மீண்டும் திடீரென உயர்வடைந்துள்ளது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய தினம் (24.01.2024) புதன்கிழமை வெளியிடப்பட்ட விலை பட்டியலிலேயே குறித்த விலை நிலவரம் வெளியாகி உள்ளது.

குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த காலங்களில் 2000/= ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை கடந்த மூன்று நாட்களுக்கு முன் கிலோவுக்கு 900/= ரூபாயாக விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்டு அதை நுகர்வோருக்கு 950/= ரூபாய் என விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின் விலை இன்றைய தினம் (24.01.2024) மீண்டும் உச்சம் பெற்றுள்ளது.

இதன்போது கரட் ஒரு கிலோகிராம் விவசாயிகளிடம் 1200/= ரூபாய் முதல் 1250/= ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்பட்டு அதை 1300/= விற்பனை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கோவா 470/= ரூபாய், லீக்ஸ் 480/=ரூபாய், ராபு 170/= ரூபாய், உருளைகிழங்கு 320/= என மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரக்கறிகளின் விலை அதிகமாக உள்ளதால், அன்றாட தேவைக்காக குறைந்த அளவே மரக்கறிகளை வாங்குவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...