யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலையில் மாணவர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன
நாடு பூராகவும் இன்றைய தினம் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் உள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் வழமைபோல் ஆரம்பமாகி கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதாகவும் பாடசாலைக்கு வந்த மாணவர்களோடு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment