மாணவன் கடத்தல்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடத்தல்காரர்கள் பிடியில் இருந்து தப்பிய மாணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன், அடிகாயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளார்.

தான் கடத்தப்பட்ட வாகனத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்த மாணவன் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று மாலை தனியார் வகுப்பொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வேளை, ஆள் நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.

மாணவனைக் கடத்திச் சென்ற வான் காட்டு பகுதி ஊடாகச் சென்றபோது, வானில் இருந்து பாய்ந்த மாணவன், காயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளார்.

காயங்களுடன் தப்பியோடி வந்த மாணவனை உறவினர்கள் மீட்டு வைத்திய சாலையில் சேர்த்தனர்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாரிடம், தான் கடத்திச் செல்லப்பட்ட வாகனத்தில் ஏற்கனவே தன் வயதை ஒத்த இரு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர் என்று பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...