அரசுக்கு ஆதரவு தெரிவித்து நாளை (10) மூன்று இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தங்காலை நகரம், கண்டி பஸ் தரிப்பிடம் மற்றும் மட்டக்களப்பு நகரம் ஆகிய இடங்களிலேயே போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment