ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின், கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசை பாதுகாக்க முற்படும் ரணிலும் வீடு செல்ல வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
ரணிலின் வீடு அமைந்துள்ள பகுதியில் நேற்று மாலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இன்று காலையும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து மற்றுமொரு தரப்பினர் அப்பகுதிக்கு வந்ததால் சிறு பதற்ற நிலைமை உருவானது.
அதேவேளை, தன்னுடன் பேச்சு நடத்த திங்களன்று கட்சி தலைமையகம் வருமாறு, போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
#SriLankaNews