image covid injection
இலங்கைசெய்திகள்

தடுப்பூசி பெறாதோர் தொடர்பில் கடும் நடவடிக்கை!

Share

தடுப்பூசி பெறாதோர் தொடர்பில் கடும் நடவடிக்கை!

தடுப்பூசி பெறுவதை நிராகரிப்போர் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுகாதாரப் பிரிவுகளின் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனாத் தடுப்பூசி ஏற்றிய பின்னரும் தொற்று பரவினால், அடுத்ததாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்க விசேட வைத்திய குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதா அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதா அடுத்த முன்னுரிமை என ஆராய்ந்து கருத்துக்கள் முன்வைக்குமாறும் ஜனாதிபதி சுகாதாரத்துறை பிரதானிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 8
செய்திகள்உலகம்

எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டுடன் போர்ச் சூழலை எதிர்கொள்ளும் தென்கொரியா: வரலாற்றுத் தீர்மானம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள...

16 8
இலங்கைஅரசியல்செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணை ஆரம்பம்!

கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது ‘சதொச’ நிறுவனம் ஊடாக முறையற்ற வகையில் பலகைகளை இறக்குமதி...

15 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்வு: இலங்கையின் பொருளாதாரத் தயார்நிலை குறித்து ஆளுநர் விளக்கம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

14 8
செய்திகள்உலகம்

வடக்கு சைப்பிரஸில் துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச்சூழல் காரணமாக, பிராந்தியப்...