rtjy 202 scaled
இலங்கைசெய்திகள்

மூன்று சிகரெட் பொருட்களின் விற்பனை நிறுத்தம்

Share

மூன்று சிகரெட் பொருட்களின் விற்பனை நிறுத்தம்

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட மூன்று வகையான சுவையூட்டப்பட்ட சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி டன்னில் ஸ்விட்ச் (Dunhill Switch), டன்னில் டபுள் கேப்சுள் (Dunhill Double Capsule) மற்றும் ஜோன் பிளேயர் கோல்ட் ப்ரோ கூல் (John Player Gold Pro Cool) ஆகிய சிகரெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், குறித்த சிகரெட்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும், கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிகரெட்டுகளை காட்சிப்படுத்தியிருந்தால்,அவற்றை அகற்றுமாறும் இலங்கை புகையிலை நிறுவனம், சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி சுவையூட்டும் புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்தை இடைநிறுத்துவது தொடர்பாக புகையிலை தொடர்பான தேசிய அமைப்பான நாட்டா(NATA) அமைப்பு தொடுத்திருந்த வழக்குகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம், தனது தீர்ப்பை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த தீர்ப்பு வாய்மொழியாக வழங்கப்பட்டதாகவும், அது தீர்ப்புக்கள் தொடர்பான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி இது தொடர்பில் நீதியமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Namal Rajapaksa 03
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை...

IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....