அரசியல்இலங்கைசெய்திகள்

ஒதுங்கியிருப்பதே காலப் பொருத்தம்! – தென்னிலங்கை போராட்டங்கள் தொடர்பில் முன்னாள் எம்.பி. சரவணபவன் தெரிவிப்பு

sara
Share

தங்களின் மீட்பர்கள் என்று சிங்கள மக்கள் யாரை நம்பினார்களோ அவர்களை இன்று அடித்து – துரத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டம் சிங்கள மக்களுக்கானது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதே பொருத்தம். இந்தப் போராட்டத்துக்கு இடையில் பேரம் பேசலுக்கான வாய்ப்புக்கள் ஏதாவது தமிழ் தரப்புக்கு கிடைக்குமாக இருந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் தென்னிலங்கையில் முளைத்துள்ள போராட்டங்கள் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஒட்டுமொத்த இலங்கையையும் ஆட்டம்காணச் செய்துள்ளது.
இந்த நெருக்கடியின் மூலவேர் தனித்து பொருளாதார பிரச்சினையன்று. இந்தத் தீவில் காலாதிகாலமாக, மகாவம்சப் புனைவுகளை நம்பி சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயன்றமைக்கான விளைவுகளையே இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்கள மக்கள். அந்த மேலாதிக்கத்த மனோநிலையில் தமிழர்களை வென்றுவிட்டதாக அவர்கள் குதூகலித்திருந்தாலும், உண்மையில் தோற்றுப்போனவர்கள் அவர்கள்தான் என்பதை காலம் எடுத்துரைத்திருக்கின்றது.

பொருளாதார நெருக்கடி இந்தத் தீவின் தமிழ்த் தேசத்தையும் பாதித்திருக்கின்றதுதான். அதை மறுக்க முடியாது. சிங்கள தேசத்து ஆட்சியாளர்களால் தமிழர் தேசம் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்குள்ளும் வாழ்ந்து வந்தவர்கள் நாம்.

ஆனாலும் இப்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை சங்கீதக் கதிரை போன்று மாற்றுவதற்கு முயலும் தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் பின்புலத்துடன் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நாம் ஆதரிப்பது தீர்வாகாது.

நாம் எமது முன்னைய சுய பொருளாதாரத்துக்கு திரும்புவதே தற்போதைய நெருக்கடியிலிருந்து தமிழர் தேசம் மீள்வதற்கான வழி. அதை எம்மவர்கள் செய்து கொண்டும்தான் இருக்கின்றார்கள். தென்னிலங்கை போராட்டக்களம் தமிழர்களுக்கு தேவையற்றது. கொழும்பு மனோநிலை உடைய தமிழர்கள், தங்களது நித்திய வாழ்வாதாரத்துக்காக சிங்களவர்களுடன் போராட்டத்தில் இணைகின்றனர். ஆனால், தமிழர்கள் திரளாக ஆதரவு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

ஆட்சியாளர்களை மாற்றித் தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக அடிப்படைக் கட்டமைப்பை மாற்றக் கோருவதுடன், மகாவம்ச புனைவுகளிலிருந்து மீளத் தயாராகும்போதே தமிழர்கள் கை கொடுப்பது காலப் பொருத்தமாக இருக்கும். இல்லாவிடின் நல்லாட்சி காலத்தில் கறிவேப்பில்லையான கதையாகவே தமிழர்களின் நிலை அமையும் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....