24 6607b3277f095
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும்..!

Share

வடக்கு – கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும்..!

தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியைப் பெற்றுத்தராத, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய அதிகாரங்களை பெற்று தர முடியாத அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) கேள்வியெழுப்பியுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சினைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெழுகுவரத்தி ஏற்றி தங்களது கவனஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், தவராசா கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே செல்வராசா கஜேந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல்.

அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் இறக்குவதற்கான செயற்பாட்டிற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...