தமிழகத்தில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

rtjy 175

தமிழகத்தில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தமிழகத்தில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அனைத்து நாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,678 இலங்கையர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது.

2,678 பேரில், இலங்கை பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாளம் ஆகிய இரண்டையும் கொண்டவர்களுக்கு அனைத்து நாட்டு கடவுச்சீட்டுகளையும் வழங்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Exit mobile version