6
இலங்கைசெய்திகள்

சஜித்தை கடைகளுக்கு செல்லுமாறு அமைச்சர் கிண்டல்!!

Share

சஜித்தை கடைகளுக்கு செல்லுமாறு அமைச்சர் கிண்டல்!!

அரிசியின் விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள கடைக்குப் போய் வருமாறு சஜித்துக்கு அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். அரிசியின் விலை குறித்த தகவல்கள் தெரியாததால், எதிர்க்கட்சித் தலைவரிடம் கடைக்குச் சென்று அரிசியின் சரியான விலையைக் கண்டறியுமாறு கேட்டுக்கொள்வதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாசுமதி, கீரி சம்பாவை பற்றி யோசித்து விட்டு மற்ற அரிசி பற்றி பேச வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவரிடம் அமரவீர தொடர்ந்தும் கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மகிந்த அமரவீர மேலும் தெரிவித்ததாவது, நீங்கள் ஹம்பாந்தோட்டையில் நீண்ட காலம் இருந்தீர்கள். அரிசி 220க்கு விற்கப்படுகிறது என்று சொன்னீர்கள். நீங்கள் சமீபத்தில் கடைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். லுனுகம்வெஹர பிரதேசத்தில் அரிசியின் விலை 125 ரூபாவாக பதிவாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் பணியாற்றிய அனைவரும் சந்தைக்குச் சென்றனர். சென்று விலைகளைக் கண்டறிந்தார்கள்.

நீங்களும் அவ்வாறு போய் வாருங்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நீங்கள் கருத்துச் சொல்லாதீர்கள். பாசுமதி, கிரி சம்பாவை பற்றி யோசித்து பேசாதீர்கள். இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நாடு மற்றும் பச்சை அரிசியை உண்கின்றனர். அவற்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் இல்லை.

எம்ஓபி உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. யாராவது கொடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன். பொலன்னறுவையில் யூரியாவில் சிறிய பிரச்சினை ஏற்பட்டது. நாடு முழுவதும் யூரியா போகிறது.

மண் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக எம்ஓபி உரம் உள்ளது. சில அதிகாரிகள் அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக உரத்தட்டுப்பாடுகளை உருவாக்குகின்றனர். அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...