tamilni 50 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் சிக்கல்

Share

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் சிக்கல்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 330 மில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் பீய்ஜிங்கின் மறுசீரமைப்பு மறுப்பு காரணமாக நிச்சயமற்றதாகியுள்ளது.

புதுடெல்லியில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய இருதரப்பு கடன் வழங்குனர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிடமிருந்து, சாத்தியமான நிதியுதவிக்கு முன்னர், அந்த நாடுகள் தங்கள் கடன்களை மறுசீரமைப்பதாக உறுதியளிக்க வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் இருந்தபோதிலும், பீய்ஜிங் கடன் நிவாரண கட்டமைப்பை வழங்கவில்லை என அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த மறுப்பு இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்தநிலையில் மொராக்கோவில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாதம் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இலங்கை கடன் குறைப்பு உடன்படிக்கையை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சீனா இந்த குழுவில் இன்னும் சேரவில்லை. ஒரு பார்வையாளராக இருந்து வருகிறது.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...