image 1
இலங்கைசெய்திகள்

விமானிகள் பற்றாக்குறை: சிக்கலில் விமானசேவை

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாரியளவிலான விமானிகளுக்கான வெற்றிடங்கள் இருப்பதன் காரணமாக சர்வதேச நியமங்களை மீறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சுமார் 80 விமானிகளுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக நேற்றைய தினம் (23.06.2023) குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடந்த ஜூன் 18 முதல் 22 வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 13 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானிகளுக்கான பற்றாக்குறை மற்றும் விமானப் பயணிகளுக்கான வசதிக் குறைவுகள் என்று ஶ்ரீலங்கன் விமானசேவையை வேறு தரப்புக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் படிப்படியாக முன்னெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதனையடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அதனை ஆமோதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...