24 663593df9cec5
இலங்கைசெய்திகள்

லண்டன் சென்ற விமானத்தில் குழப்பம் – மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் விமான சேவை

Share

லண்டன் சென்ற விமானத்தில் குழப்பம் – மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் விமான சேவை

லண்டனுக்கான UL 503 விமானம் ஒஸ்ரியாவில் உள்ள வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை மன்னிப்பு கோரியுள்ளது.

மருத்துவ அவசரம் காரணமாக இந்த விமானம் இவ்வாறு தரையிறங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை வெளியிட்ட அறிக்கையில், மே மாதம் முதலாம் திகதி 272 பயணிகளுடன் லண்டனுக்குப் புறப்பட்ட UL 503 விமானம், மருத்துவ அவசரநிலை காரணமாக வியன்னாவில் தரையிறங்கியதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

அதைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. லண்டன் நேரப்படி இரவு 10 மணி அளவில் ஹீத்ரோ விமான நிலையத்தை அடைய முடியாமல் போய்விடும் என்பதால் பயணம் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக UL 503 விமானம் மறுநாள் புறப்படுவதற்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவிற்கு விசா பெற்ற அனைத்து பயணிகளுக்கும் வியன்னாவில் தங்குமிடம் வழங்கப்பட்டது. விமானம் அடுத்த நாள் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது.

லண்டன் நேரப்படி இரவு 9.30 மணிக்கு லண்டனை வந்தடைந்தது. இந்த தாமதத்தின் காரணமாக லண்டனில் இருந்து கொழும்புக்கு செல்லும் UL 504 விமானத்தை இரத்து செய்ய வேண்டியிருந்தது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது மற்றும் ஏற்கனவே வந்தவர்களுக்கு செய்தவர்களுக்கு ஹோட்டல் தங்குமிட வசதி வழங்கப்பட்டது.

எங்கள் பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது.

மேலும் அவர்களின் புரிதல் மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்” என ஸ்ரீலங்கன் விமான சேவை மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...