tamilnid 13 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு

Share

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு

பண்டிகை காலத்தில் எரிபொருளை தட்டுப்பாடின்றி விநியோகிக்க அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உடன்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகச்சங்கத்தின் இணைச்செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 50 சதவீத எரிபொருள் கையிருப்பை பேனுமாறு இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக அறிவுறுத்தியுள்ளார்.

லங்கா ஐஓசி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சினோபெக் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் தடையின்றிய மின் விநியோகத்தை உறுதி செய்யுமாறும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்த அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...