tamilni 121 scaled
இலங்கைசெய்திகள்

28 நிமிட காணொளி வெளியிட்ட சஹ்ரான்! ஞாபகப்படுத்தும் சரத்வீரசேகர

Share

28 நிமிட காணொளி வெளியிட்ட சஹ்ரான்! ஞாபகப்படுத்தும் சரத்வீரசேகர

சனல் – 04 இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்கள் பொய்யானவை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இணையதளத்தில் வெளியிடப்பட்ட காணொளி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது இது முதல் தடவையல்ல. சனல் -04 இலங்கை தொடர்பில் 2011, 2012 மற்றும் 2013 ஆகிய காலப்பகுதிகளில் வெளியிட்ட பல காணொளிகள் பொய்யானவை என்பதை நான் ஜெனிவாவில் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளேன்.

ஜெனிவா கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் பொய்யான காணொளியை சனல் 4 தற்போது வெளியிட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதினை வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தென்னிலங்கையில் சிங்கள பௌத்த அரச தலைவர் ஒருவரை உருவாக்குவதற்காக 09 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அன்ஷிப் அசாத் மௌலானா தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகச்செயலாளராக பதவி வகித்த நிலையில் 700 மில்லியன் ரூபாவினை மோசடி செய்ததினை தொடர்ந்து இங்கிலாந்துக்குத் தப்பிச்சென்று குறுகிய சுயநல நோக்கத்துக்காக அவர் செயற்பட்டு வருகின்றார்.

சஹ்ரான் தற்கொலை குண்டுத்தாக்குலை மேற்கொள்வதற்கு முன்னர் 28 நிமிட காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ‘தன்னையும், தாய், பிள்ளைகள் உட்பட ஏனைய தரப்பினரை அல்லாவுக்கு அர்ப்பணிப்பதாக ‘குறிப்பிட்டுள்ளார்.

எனவே தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை உருவாக்குவதற்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவரும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...