tamilni 121 scaled
இலங்கைசெய்திகள்

28 நிமிட காணொளி வெளியிட்ட சஹ்ரான்! ஞாபகப்படுத்தும் சரத்வீரசேகர

Share

28 நிமிட காணொளி வெளியிட்ட சஹ்ரான்! ஞாபகப்படுத்தும் சரத்வீரசேகர

சனல் – 04 இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்கள் பொய்யானவை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இணையதளத்தில் வெளியிடப்பட்ட காணொளி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது இது முதல் தடவையல்ல. சனல் -04 இலங்கை தொடர்பில் 2011, 2012 மற்றும் 2013 ஆகிய காலப்பகுதிகளில் வெளியிட்ட பல காணொளிகள் பொய்யானவை என்பதை நான் ஜெனிவாவில் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளேன்.

ஜெனிவா கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் பொய்யான காணொளியை சனல் 4 தற்போது வெளியிட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதினை வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தென்னிலங்கையில் சிங்கள பௌத்த அரச தலைவர் ஒருவரை உருவாக்குவதற்காக 09 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அன்ஷிப் அசாத் மௌலானா தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகச்செயலாளராக பதவி வகித்த நிலையில் 700 மில்லியன் ரூபாவினை மோசடி செய்ததினை தொடர்ந்து இங்கிலாந்துக்குத் தப்பிச்சென்று குறுகிய சுயநல நோக்கத்துக்காக அவர் செயற்பட்டு வருகின்றார்.

சஹ்ரான் தற்கொலை குண்டுத்தாக்குலை மேற்கொள்வதற்கு முன்னர் 28 நிமிட காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ‘தன்னையும், தாய், பிள்ளைகள் உட்பட ஏனைய தரப்பினரை அல்லாவுக்கு அர்ப்பணிப்பதாக ‘குறிப்பிட்டுள்ளார்.

எனவே தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை உருவாக்குவதற்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவரும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...