5 13
இலங்கைசெய்திகள்

மாதந்தோறும் தர ஆய்வுக்கு உட்படுத்தப்படபோகும் பேருந்துகள்

Share

நெடுந்தூரப் பேருந்துகள் (100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும்) மாதந்தோறும் தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இந்த ஆய்வுச் சான்றிதழை சரிபார்ப்புக்காக பேருந்தின் உள்ளே வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை பெஸ்டியன் மாவத்தை பயணிகள் பேருந்து முனையத்தில் 100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகளின் தரத்தை சோதிக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சமீபகாலமாக, பேருந்து விபத்துகள் அதிகரிப்பதும், அவற்றில் பல மோசமான வாகனப் பராமரிப்பு மற்றும் செயல் திறனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதும் குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி. ஏ. சந்திரபால தெரிவித்தார்.

தற்போது பேருந்துகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வு செய்வது அவசியம் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

போக்குவரத்து அமைச்சு, ஒரு சிறப்புக் குழுவின் மூலம் ஒவ்வொரு வாகனத்திலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கிய அம்சங்களை இறுதி செய்துள்ளது.

இனிமேல், அந்தக் குறித்த பட்டியலின் அடிப்படையில் சான்றளிக்கப்பட்ட நிபுணர்களால் மாதந்தோறும் ஆய்வுகள் நடத்தப்படும்.பேருந்து உரிமையாளர்கள் இந்த ஆய்வுச் சான்றிதழை பேருந்தின் உள்ளே வைத்திருக்க வேண்டும், மேலும் பயணிகள் கோரினால் அதனைப் பார்க்கும் உரிமை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...