10 13
இலங்கைசெய்திகள்

பிமலிடம் இருந்து பறிக்கப்பட்ட முக்கிய அமைச்சுப் பதவி

Share

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து அமைச்சுப் பதவியொன்று பறிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சுங்கத்தில் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொலகளன்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் சிவில் விமான சேவைகள் அமைச்சு பிமல் ரத்நாயக்கவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இன்றே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விசாரணைகள் நடைபெறும் அமைச்சருக்கு குறித்த அமைச்சில் பதவி வகிப்பது உசிதமல்ல என்பதால் இந்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் பிமல் ரத்நாயக்கவின் முன்னைய அமைச்சுப் பதவிகளான, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் உள்ளிட்டவற்றில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுப் பதவி மீளெடுக்கப்பட்டு அது அனுர கருணாதிலக்கவுக்கு வழங்கப்பட்டது.

மேலும், பிமல் ரத்நாயக்கவிற்கு புதிதாக நகர மேம்பாட்டு அமைச்சு இணைக்கப்பட்டதோடு, தற்போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாடு உள்ளிட்ட அமைச்சுக்கள் அவரின் கீழ் உள்ளன.

Share
தொடர்புடையது
இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...

bus deesel
இலங்கை

டீசல் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் !

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத்...

canada job
இலங்கை

கனடா மோகம் – பறிபோன எட்டு மில்லியன் ரூபா.

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்...

police team
இலங்கை

துரிதமாக இடம்பெறும் இரண்டு தனி காவல்துறையினரின் விசாரணை.

மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர்...