33 1
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த சிறீதரன்

Share

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த சிறீதரன்

கிளிநொச்சி (Kilinochchi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரனை சந்தித்துள்ளார்.

சிறீதரன் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாட்டு அரசியலின் தற்கால போக்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உமா குமரன் (Uma Kumaran) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் பெருமையடைகிறேன்.

எனது தேர்தலுக்குப் பிறகு நான் பெற்ற முதல் வாழ்த்துக்களில் அவருடைய வாழ்த்துக்களும் அடங்கும்.

ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு தொழிற்கட்சியின் ஆதரவை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். ஒன்றாக, நீதிக்கான எங்கள் போராட்டத்தை தொடர்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...