tamilni 533 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையர்கள் ஒவ்வொருவரும் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

Share

இலங்கையர்கள் ஒவ்வொருவரும் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத நிலவரப்படி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசாங்கம் பெற்ற மொத்தக் கடன் தொகை 28,094.69 பில்லியன் ரூபா எனவும், இதன்படி தனிநபர் கடன் தொகை 12,65,000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் விஞ்ஞான மற்றும் புள்ளியியல் கற்கைகள் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

மேலும், நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு அரசு எடுத்த கடன் தொகை ரூ.50,60,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 இல் நாட்டின் தனிநபர் கடன் ஆறு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் (690,000) ரூபாவாகும். 2021 இல் 08 லட்சம் ரூபாவையும் தாண்டியுள்ளதுடன், கடந்த மூன்று ஆண்டுகளில், அந்த தொகை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

நாட்டின் மொத்தக்கடனை கருத்தில் கொண்டால் அது 13,031 பில்லியன் ரூபாவாகும். 2020ல் 15,117 பில்லியனாகவும், 2021ல் 17,614 பில்லியனாகவும் வளர்ந்துள்ளதுடன், 2022ல் இது 27,492 பில்லியன் ரூபாவாக வளர்ந்துள்ளது.

அதன்படி, 2019ஆம் ஆண்டுக்குள் ஒரு நபருக்காக அரசாங்கம் பெற்றுள்ள கடன் தொகை 5,98,000 என்றும் தெரியவருகின்றது. இது 2020 இல் 690,000 ஆகவும், 2021 இல் 795,000 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும், 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் தனி நபர் நிதி நிறுவனங்களிலும் மக்கள் கடன் பெற்றுள்ள நிலையில், மக்கள் சார்பில் அரசு பெற்ற கடன் தொகை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதுதவிர தங்க பொருட்களை அடகு வைக்கும் நிலையும் காணப்பட்டுள்ளதுடன், பலர் கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக வசந்த அத்துகோரல மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...