24 662731b5e4940
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற வெளிநாட்டு பிரஜை

Share

இலங்கையில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற வெளிநாட்டு பிரஜை

இலங்கையில் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்ற இந்திய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி (Kandy) – வத்தேகம பகுதியை சேர்ந்த ஆசிரியையாக பணியாற்றும் இளம் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற 26 வயதான இளைஞனை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் தன்னை ஊடகவியலாளராகவும் மற்றும் திரைப்பட நடிகராகவும் அறிமுகம் செய்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற இளைஞன், திருமணம் செய்ய விரும்பம் தெரிவித்துள்ளனார். எனினும் பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த இளைஞன் விசா முடிவடைந்த நிலையில் இலங்கையில் தங்கியிருந்து, பெண்ணின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

வத்தேகம பிரதேசத்திற்கு செல்வதற்காக கண்டி மணிக்கூட்டு கோபுர பேருந்து நிலையத்தில் தயாராக நின்ற போது, குறித்த இந்திய பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்திய பிரஜையை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கண்டி சுற்றுலா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்திய பிரஜையை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...