21 5
இலங்கைசெய்திகள்

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே

Share

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே என முன்னாள் இந்திய துணை தூதர் நடராஜன் (Nadarajan) தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் கலாசார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இந்தியா இலங்கைக்கு பெரியண்ணன் என்று கூறுவார்கள் ஆனால் இந்தியா இலங்கைக்கு பெரியண்ணன் அல்ல இந்தியாவும் இலங்கையும் இரட்டைச் சகோதரர்கள் என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்திருந்தார்.

தற்போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக பக்கத்து நாடுகளுடனான உறவே முக்கியமாக இருக்கிறது.

பத்து நாடுகளில் நான் பணி புரிந்த அனுபவங்களை புத்தகமாக எழுதி அதை மட்டக்களப்பில் வெளியிட்டுள்ளேன்.

இந்த புத்தகத்தில் இலங்கையில் நான் பணியாற்றிய அனுபவங்களையும், போர் காலத்தில் மக்கள் எவ்வளவு அவதிப்பட்டனர், போர்க்களத்தில் நடந்த பல வெளிவராத சம்பவங்களையும் பதிவு செய்துள்ளேன்.

அத்துடன் கிழக்கு மாகாணம் தொடர்பாக சிறு குறிப்பும் எழுதியுள்ளேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...