21 5
இலங்கைசெய்திகள்

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே

Share

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே என முன்னாள் இந்திய துணை தூதர் நடராஜன் (Nadarajan) தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் கலாசார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இந்தியா இலங்கைக்கு பெரியண்ணன் என்று கூறுவார்கள் ஆனால் இந்தியா இலங்கைக்கு பெரியண்ணன் அல்ல இந்தியாவும் இலங்கையும் இரட்டைச் சகோதரர்கள் என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்திருந்தார்.

தற்போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக பக்கத்து நாடுகளுடனான உறவே முக்கியமாக இருக்கிறது.

பத்து நாடுகளில் நான் பணி புரிந்த அனுபவங்களை புத்தகமாக எழுதி அதை மட்டக்களப்பில் வெளியிட்டுள்ளேன்.

இந்த புத்தகத்தில் இலங்கையில் நான் பணியாற்றிய அனுபவங்களையும், போர் காலத்தில் மக்கள் எவ்வளவு அவதிப்பட்டனர், போர்க்களத்தில் நடந்த பல வெளிவராத சம்பவங்களையும் பதிவு செய்துள்ளேன்.

அத்துடன் கிழக்கு மாகாணம் தொடர்பாக சிறு குறிப்பும் எழுதியுள்ளேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...