21 5
இலங்கைசெய்திகள்

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே

Share

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சென்றவர்கள் இலங்கை தமிழர்களே என முன்னாள் இந்திய துணை தூதர் நடராஜன் (Nadarajan) தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் கலாசார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இந்தியா இலங்கைக்கு பெரியண்ணன் என்று கூறுவார்கள் ஆனால் இந்தியா இலங்கைக்கு பெரியண்ணன் அல்ல இந்தியாவும் இலங்கையும் இரட்டைச் சகோதரர்கள் என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்திருந்தார்.

தற்போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக பக்கத்து நாடுகளுடனான உறவே முக்கியமாக இருக்கிறது.

பத்து நாடுகளில் நான் பணி புரிந்த அனுபவங்களை புத்தகமாக எழுதி அதை மட்டக்களப்பில் வெளியிட்டுள்ளேன்.

இந்த புத்தகத்தில் இலங்கையில் நான் பணியாற்றிய அனுபவங்களையும், போர் காலத்தில் மக்கள் எவ்வளவு அவதிப்பட்டனர், போர்க்களத்தில் நடந்த பல வெளிவராத சம்பவங்களையும் பதிவு செய்துள்ளேன்.

அத்துடன் கிழக்கு மாகாணம் தொடர்பாக சிறு குறிப்பும் எழுதியுள்ளேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...