rtjy 36 scaled
இலங்கைசெய்திகள்

சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுக்கு பிணை

Share

சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுக்கு பிணை

சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நீர்கொழும்பு நீதிமன்றில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (30.11.2023) சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக 3 பேர் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கை நேரத்தின் படி காலை 10 மணியளவில் இலங்கைக்கு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் போது முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இருவர் உள்ளடங்களாக மூவர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2015ஆம் ஆண்டளவில் ஒருவர் அகதித் தஞ்சம் கோரப்பட்ட நிலையில் அவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

சுவிட்ஸசர்லாந்தில் அண்மைக்காலமாக இலங்கையின் அகதித் தஞ்சம் கோருபவர்களின் கோரிக்கைகள் அதிகம் நிராகரிக்கப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....