4 17
இலங்கைசெய்திகள்

ரணிலை ஆதரிக்க பசிலிடம் விலைபோன தமிழ் அரசியல் தலைமைகள்!

Share

ரணிலை ஆதரிக்க பசிலிடம் விலைபோன தமிழ் அரசியல் தலைமைகள்!

கடந்த 2022 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு அரகலய எழுச்சியானது முற்றுப்புள்ளி வைத்திருந்ததோடு அந்த சம்பவம் ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) ஜனாதிபதியாக்க வழிவகுத்திருந்தது.

ஆனால் ரணிலின் வெற்றிக்கு தமிழ் அரசியல்வாதிகளை வைத்து பேரம் பேசும் பின்னணி ஒன்று இருந்ததாகவும், அதில் பசில் ராஜபக்சவின் பங்கு உள்ளது எனவும் வடக்கின் முக்கிய அரசியல் கட்சியொன்றின் உறுப்பினரால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வீழ்த்தப்பட்ட கோட்டாபயவின் ஆட்சிப்பீடத்திற்கு பிரதான கட்சிகளில் இருந்து மூவர் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிபீடத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதில் ரணிலை ஆதரிக்கபோவதில்லை என்ற நிலைப்பாட்டுடன் வடக்கு – கிழக்கின் முக்கிய தமிழ் கட்சிகள் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தி இரு முடிவை வகுத்திருந்தன. எனினும் அந்த நிலைப்பாடும் தோல்வியை கண்டிருந்தது.

இந்நிலையில், அதன்பின்னர் இடம்பெற்ற ஒரு நாடாளுமன்ற உரையில் ரணில் விக்ரசிங்க முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனை நோக்கி “உங்கள் ஆதரவாளர்களில் சிலரும் என்னை வாக்கெடுப்பில் ஆதரித்தார்கள்” என சாடலாக பேசியிருந்தார். இந்த விடயம் அப்போது மறுக்கப்பட்டிருந்தாலும், ஜபிசி தமிழ் ஊடகத்தில் இடம்பெற்ற களம் நிகழ்ச்சியின் ஊடாக தமிழ் அரசியலின் சில சர்ச்சைக்குறிய விடயங்கள் கிளரப்பட்டுள்ளன.

அந்தவகையில் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரெலோ கட்சியின் உறுப்பினர் விந்தன் கணகரட்னம் “ரணிலுக்கு ஆதரவை திரட்ட அமெரிக்காவில் இருந்து தமிழ் அரசியல்வாதிகளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa)விலைக்கெடுத்து வாங்கினார்” என பகிரங்கப்படுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...