3 17
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியக்குழு

Share

இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியக்குழு

நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவே இலங்கைக்கு வருகைதரவுள்ளது.

இந்தக்குழு, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள், நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான முன்னைய ஒப்பந்தங்களின் நமைமுறையாக்கம் போன்றவற்றை மதிப்பீடு செய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீளாய்வுக்கு பின்னர் இலங்கைக்கான அடுத்த தவணை கடனை, சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எதிர்வரும் ஜனவரி அளவில் இந்த கடன் தவணையை தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...