5 32
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச!

Share

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுத்ரி குழுமம் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் நேபாளத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கோட்டாபய, நேற்று(23.09.2024) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளார்.

இதேவேளை அவர் ஜாம்சிகேலில் உள்ள ஹோட்டல் விவாண்டாவில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த பயணம் அவரது தனிப்பட்ட பயணம் என்பதுடன், இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்சவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் கோட்டாபய ராஜபக்ச பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...