கொழும்பில் சடலத்தால் பொலிஸாருக்கு ஏற்பட்ட குழப்பம்
இலங்கைசெய்திகள்

கொழும்பில் சடலத்தால் பொலிஸாருக்கு ஏற்பட்ட குழப்பம்

Share

கொழும்பில் சடலத்தால் பொலிஸாருக்கு ஏற்பட்ட குழப்பம்

பொரளை பிரதேசத்தில் கவனக்குறைவாக ஓட்டிச் சென்ற இறுதி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை பொலிஸாரிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் போது அதில் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரளை பொலிஸ் அதிகாரிகள் பொரளை டி.எஸ். சேனநாயக்க சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது, ​​கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக இறுதி ஊர்வல வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டது.அத்துடன், சாரதி மதுபோதையில் இருந்ததால் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வாகனம் பொரளை பொலிஸாருக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், காரை விட்டு இறங்கிய சாரதி, பின்னால் சடலம் இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனால் குழப்பமடைந்த பொலிஸார், மற்றொரு இறுதி ஊர்வல வாகனத்தை அழைத்து சடலத்தை அனுப்பியுள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தினர். சடலம் கொழும்பில் உள்ள பிரபல மலர்சாலைக்கு சொந்தமானது.

அந்த சந்தர்ப்பத்தில் சடலத்துடன் அந்த வாகனத்தை ஓட்டி சென்றவர் மலர்சாலையின் மேலாளர் ஓட்டிச் சென்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...