24 661e1725035a9
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை

Share

மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இஸ்ரேல் மீது கடந்த 13ஆம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், வான்வெளி மூடப்பட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் கொழும்பிலிருந்து டெல் அவிவ் நகருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி காலை ஆர்க்கியா என்ற விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயண ஏற்பாடுகளை உறுதிசெய்து, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர், ஏற்கனவே உள்ள விமானப் பயணச்சீட்டுகளைக் கொண்டுள்ள பயணிகள் தமது முன்பதிவுகளை உறுதிப்படுத்துமாறு தூதுவர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

இதுமட்டுமன்றி புது டெல்லியிலிருந்து டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு ஏர்-இந்தியா (Air india) விமானங்கள் ஏப்ரல் 18 முதல் மீண்டும் தொடங்கும் என்பதோடு இது கொழும்பிலிருந்து புது டெல்லி வழியாக வரும் பயணிகள் இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், FLY DUBAI ஏர்லைன்ஸ் டுபாய் மற்றும் அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு விமானங்களை ஆரம்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...