24 661e1725035a9
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை

Share

மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இஸ்ரேல் மீது கடந்த 13ஆம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், வான்வெளி மூடப்பட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் கொழும்பிலிருந்து டெல் அவிவ் நகருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி காலை ஆர்க்கியா என்ற விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயண ஏற்பாடுகளை உறுதிசெய்து, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர், ஏற்கனவே உள்ள விமானப் பயணச்சீட்டுகளைக் கொண்டுள்ள பயணிகள் தமது முன்பதிவுகளை உறுதிப்படுத்துமாறு தூதுவர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

இதுமட்டுமன்றி புது டெல்லியிலிருந்து டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு ஏர்-இந்தியா (Air india) விமானங்கள் ஏப்ரல் 18 முதல் மீண்டும் தொடங்கும் என்பதோடு இது கொழும்பிலிருந்து புது டெல்லி வழியாக வரும் பயணிகள் இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், FLY DUBAI ஏர்லைன்ஸ் டுபாய் மற்றும் அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு விமானங்களை ஆரம்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...