24 661e1725035a9
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை

Share

மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இஸ்ரேல் மீது கடந்த 13ஆம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், வான்வெளி மூடப்பட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் கொழும்பிலிருந்து டெல் அவிவ் நகருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி காலை ஆர்க்கியா என்ற விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயண ஏற்பாடுகளை உறுதிசெய்து, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர், ஏற்கனவே உள்ள விமானப் பயணச்சீட்டுகளைக் கொண்டுள்ள பயணிகள் தமது முன்பதிவுகளை உறுதிப்படுத்துமாறு தூதுவர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

இதுமட்டுமன்றி புது டெல்லியிலிருந்து டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு ஏர்-இந்தியா (Air india) விமானங்கள் ஏப்ரல் 18 முதல் மீண்டும் தொடங்கும் என்பதோடு இது கொழும்பிலிருந்து புது டெல்லி வழியாக வரும் பயணிகள் இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், FLY DUBAI ஏர்லைன்ஸ் டுபாய் மற்றும் அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு விமானங்களை ஆரம்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...