tamilni 105 scaled
இலங்கைசெய்திகள்

2015இல் எங்கு பார்த்தாலும் மகிந்தவின் சுவரொட்டிகள்!

Share

2015இல் எங்கு பார்த்தாலும் மகிந்தவின் சுவரொட்டிகள்!

தேசிய நாயகனாகப் போற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று அரசியல் களத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக இந்திய நாளிதழ் ஓன்று கூறுகிறது.

The pioneer என்ற நாளிதழின் ஊடகவியாளர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டு, தாம் முதன் முறையாக பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்றுக்காக இலங்கை விஜயத்தை மேற்கொண்டபோது, கண்ட காட்சிகளை அவர் விபரித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தலை நகருக்குச் செல்லும் பாதையின் நெடுகில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றமைக்காக, எந்த இடத்தையும் விட்டு வைக்காத வகையில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அத்துடன் இரண்டு நாட்கள் நீடித்த இந்த கருத்தரங்கு முழுவதும், சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் மகிந்த ராஜபக்ச மீது புகழை பொழிவதில் பரஸ்பரம் போட்டியிட்டனர்.

ஜனாதிபதி ராஜபக்சவின் தத்துவமான “மகிந்த சிந்தனை” நாடு முழுவதும் பேசப்பட்டது. இதுவே, மகிந்த ராஜபக்சவை முன்கூட்டிய வாக்கெடுப்பிற்கு செல்லத் தூண்டியது. கருத்து கணிப்பாளர்களும் ராஜபக்சே வெற்றி பெறுவார் என்று முன்னறிவித்தனர்.

ஆனால் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. ராஜபக்சர்களை எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு தமது இரண்டாவது இலங்கைப் பயணத்தின் போது மகிந்த ராஜபக்சவின் படங்களை எங்கும் பார்க்கவில்லை. மகிந்த சிந்தனையில் சொற்பொழிவு செய்தவர்களைக் காணவில்லை.

மகிந்தவோ சிந்தனையோ இருக்கவில்லை. பண்டைய கேரளக் கவிஞரான பூந்தனத்தின் கவிதைப் படைப்பான ஞானப்பனாவின் கூற்றுப்படி அரண்மனை ஆலோசகர்களின் வார்த்தைகளை பின்பற்றும் ஆட்சியாளர்கள் சில நாட்களில் மறைந்து விடுகிறார்கள் என சொல்லப்படுகிறது.

இறைவன் விரும்பினால், ஒரு அரசனை பிச்சைக்காரனாக முடியும் என்ற கூற்றை, த பயணீர் நாளிதழின் செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...