protest
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேச கல்வியகத்துடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கலந்துரையாடல்!

Share

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் பலரும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் சர்வதேச கல்வியகத்தின் உயர்நிலைக் குழுவுடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலந்துரையாடியுள்ளனர்.

இக் கலந்துரையாடலில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பள்ளிசெல் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அவலநிலை, கல்விக்கான அதிகரித்த செலவீனம், போக்குவரத்து சிரமங்கள், அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் துயரநிலை போன்ற பல்வேறு விடங்கள் குறித்து எடுத்தியம்பப்பட்டுள்ளது.

ZOOM மூலமாக நடைபெற்ற இந்தக் கருத்துப் பகிர்வில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சிரேஸ்ட ஆலோசகரும், சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குநருமான திரு.த.மகாசிவம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆலோசகரும் சர்வதேச பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளருமான திருமதி. ஈ.ஜெ.மகேந்திரா, சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன், சங்கத்தின் சிரேஸ்ட துணைப் பொதுச் செயலாளர் சி.சசிதரன், சங்கத்தின் வடக்கு மாகாணச் செயலாளர் ஜெ.நிஷாகர், சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் ஏ.பாலசிங்கம் ஆகியோரோடு பெண்கள் வலையமைப்பின் சிரேஸ்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் கல்விக்காக பெண்களின் பங்களிப்பு அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் உரையாடப்பட்டதோடு, பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவர்களின் போசாக்கு நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இது போன்று முன்பு நடைபெற்ற கலந்துரையாடல் மூலமே நிறுத்தப்படவிருந்த உலக உணவுத்திட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் மீண்டும் செயற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 16
செய்திகள்இலங்கை

சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கச் சலுகை: டிசம்பர் 25 வரை காலாவதியான உரிமங்களுடன் வாகனம் ஓட்டச் சட்டத் தடைகள் இல்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்களைப்...

25 692d897a24140
செய்திகள்இலங்கை

பேரழிவு குறித்து அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி குற்றவியல் வழக்குத் தொடரத் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அறிவிப்பு!

இலங்கையில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை (Disaster Situation) மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மனிதாபிமான உதவி: கைதிகள் தங்களின் மதிய உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெருந்தொகையான கைதிகள், இன்றைய நாளுக்கான தங்களின் மதிய உணவை, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்...

images 15
செய்திகள்இலங்கை

வடமாகாணத்தில் பேரழிவு மீட்புக்குப் பிந்தைய சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார...