rtjy 130 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை!

Share

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறைக்கு பதிலாக 18ஆம் திகதி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள இந்து மக்கள் நாளையதினம்(12) தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், நாளையதினம் ஞாயிற்றுக் கிழமை என்ற காரணத்தினால் எதிரவ்ரும் திங்கட்கிழமை 13ஆம் திகதி நாட்டில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவிக்கையில்,

தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மாற்றீடாக எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...

army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...