1 1 1
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் அனுர விடுத்த கோரிக்கை

Share

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் அனுர விடுத்த கோரிக்கை

வடக்கு, கிழக்கில் உள்ள சகலரும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தமிழ் மக்களின் ஆதரவை கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ் பேசும் மக்கள் அதே மொழியில் அரசுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களும் செய்து தரப்படும் என்றும் அனுர உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, தமது அரசாங்கத்தின் கீழ் ஆசிரியத் தொழில் நாட்டிலுள்ள பத்து முக்கிய தொழில்களில் ஒன்றாக மாறும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் அனுர விடுத்த கோரிக்கை | Anura Seeks The Support Of The Tamil People

அத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் மோதக்கூடிய அரசியல் கட்சி தென்னிலங்கையில் தற்போது இல்லை என்றும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...