இலங்கையில் உணவுக்காக பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பாடகர்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உணவுக்காக பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பாடகர்

Share

இலங்கையில் உணவுக்காக பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பாடகர்

பாணந்துறை ஹோட்டலில் 1650 ரூபா கட்டணத்தை செலுத்தாமல் உணவகத்தில் இருந்து வெளியேற முற்பட்ட பிரபல பாடகர் சமன் டி சில்வா என்பவரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

கட்டணத்தை செலுத்தாமல் செல்ல முயன்ற பாடகர் ஹோட்டல் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு பாணந்துறை பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றிற்கு வந்த குழுவினர், உணவு உட்கொண்ட பின்னர், கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முற்பட்ட போது ​​வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் உணவுக்காக பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பாடகர் | Sri Lanka Police Sri Lanka Food Shop

சமன் டி சில்வா மற்றும் உணவகத்தின் ஊழியர்கள் குழுவிற்கும் இடையில் முதலில் வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.

கட்டணத்தை செலுத்த மறுத்த சமன் டி சில்வா கோபத்துடன் நடந்து கொண்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமன் டி சில்வாவுடன் வந்த குழுவின் ஹோட்டல் ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதலில் உணவகத்தின் காசாளரும் பணியாளரும் காயமடைந்துள்ளனர்.

உணவகத்தில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. காயமடைந்த காசாளர் மற்றும் பணியாளரால் பாணந்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...