tamilni 372 scaled
இலங்கைசெய்திகள்

தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட ஐயாயிரம் சிறுமிகள்

Share

தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட ஐயாயிரம் சிறுமிகள்

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் நான்கு ஆண்டுகளுக்குள் சொந்த விருப்பத்தின் பேரில் தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அண்மைய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கண்டி தேசிய மருத்துவமனையின் மருத்துவ கலாநிதி பாலித பண்டார சுபசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக 6,307 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் 5,055 முறைப்பாடுகள் குறித்த சிறுமிகளின் சம்மதத்துடன் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பானது என மருத்துவ கலாநிதி பாலித பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் பிரிவுகளில் கடந்த மூன்று வருடங்களாக 16 வயதுக்குட்பட்ட 132 சிறுமிகள் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் அவர்களது சம்மதத்துடன் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Featuredgughik
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா”...

இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...