tamilnif 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை

Share

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மருந்து நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் பணிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ்துறை அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அண்மையில் மருந்து ஊழலில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு மருந்துகள் விநியோகித்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கூடுதல் ஆய்வு நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியமும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் ஜனக சிறிசந்திரகுப்த மற்றும் பலர் தற்போது இந்த ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...