tamilni 205 scaled
இலங்கைசெய்திகள்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம், சமூக ஊடகங்களை தவறாக கையாளுபவர்களுக்கு பிரச்சினையாக அமையும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

பாணந்துறையில் இன்று (10.02.2024) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“சமூக வலைதளங்களில் எங்களை, அரசாங்கத்தை, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அனைவர் தொடர்பிலும் அவதூறு பரப்புகின்றனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கையில் 400,000 ரூபா பணம் இருந்தது.

குறித்த நபர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி எங்களை அவதூறாக பேசுபவர். இவ்வாறு அவதூறாக பேசும்படி அரசியல்வாதி ஒருவர் தான் பணத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் காரில் கொழும்பு சென்று டொலர்களை ரூபாயாக மாற்றிய போது கைது செய்யப்பட்டார். எதிர்காலத்தில் அந்த அரசியல்வாதியின் பெயரை வௌிப்படுத்துவேன்.

இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக தான் இந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

இந்த சட்டம், சமூக ஊடகங்களை தவறாக கையாளுபவர்களுக்கு பிரச்சினையாக அமையும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...